நட்பே காதல்
துலங்குவது நட்பானால்
தொடர்வது காதலாகும்.
நட்புக்கும் காதலுக்கும்
நடப்பினில் பாலில்லை.
பொதுப்பாலே புரிந்திடுவீர்!
ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும்
அன்பு கொண்டால்தான் நட்பா?
பால் வேறாய்ப் பழகினால் காதலா?
பண்பான அன்பானால் நட்பும் காதலே!
நட்பும் காதலும் பொருளில் பேதமில்லை
செப்பும் சொற்களில்தான் வாதம் உள்ளே.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பும் பொதுவாகும்
காணும் பாலினம் தோணுவதும் மனிதமாகும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment