Thursday, 31 July 2025

நட்புக்குழு

நட்புக் குழுவாம் எழுத்து வாழ்க

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாலெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!

தெய்வம் தந்த வீடு எழுத்து நமக்கிருக்கு.
பெய்வம் அதில் அன்பு வளர்ந்து சிறப்பதற்கு.
உய்வம் தமிழ் பழகி மனிதம் சொல்வதற்கு.
செய்வம் தமிழ் கவிதை உலகம் நிலைப்தற்கு .

தேடும் தமிழ் தேடு எழுத்திடத்தில்.
பாடும் தமிழ் பாடு எழுத்திடத்தில்.
சூடும் கலைச் சூடு  எழுத்திடத்தில்.
நாடும் நிலை நாடு எழுத்திடத்தில்.

உந்தன் பேர் நிறுத்தும் இந்த மண்ணிலே!
முந்தன் நேர் பொருத்தும்உந்தன்எண்ணிலே!
பிந்தன் சீர் திருத்தும் அந்தக் கண்ணிலே!
இந்தன் பார் கருத்தும் கந்தும் ஒண்ணிலே!

படிக்கும் தமிழினிக்க பழகும் கவியினிக்க
வடிக்கும் பொருளினிக்க வாழும் வாழ்வினிக்க
முடிக்கும் செயலினிக்க முந்தும் கருத்தினிக்க
துள்ளும் மனமினிக்க தொடர்வோம் எழுத்தினிக்க. 

எவரிது செய்யினும் அவர்வாழ வேண்டும்!
சுவராய் அமைந்தார் ஓவியம் கண்டோம்!
அழியா ஓவிய எழுத்துக் குழுவாம் நட்பும்
வழியாய் துணையாய் வாழ்ந்திட வாழ்வோம்!!


தங்கள் அன்பன்

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 23 July 2025

கவிஞன் ஓரு விஞ்ஞானி.

கவிஞன் ஒரு விஞ்ஞானி

வேலை வேறென்ன செய்வான்!!
வேலையே எழுதுவதுதான்!!
வெட்டியென்றே இப்படித்தான்
சுட்டாமல் சுட்டுவர்..

எமக்குத் தொழில் கவிதை
என்று பாரதி அன்றதை
பெருமையாகச் சொன்னானே.
வறுமையின் வாடலிலும்!

எழுதுவதென்பது வெறும்
பொழுது போக்கோ அது
உழுபவன் படும் பாடென
உணர்வாரோ!!

பழுதுபடாது அஞ்சி அஞ்சி
படைப்பதென்பதும் எளிதோ!
கழுதையறியுமோ சொல்வீர்
கற்பூர வாசனையும்!!

கவிஞனொரு தாயுமானவன்
கவிதையொன்றில் கூறினேன்
பிரசவிக்கும் வேதனையது
பேசாதீர் கேலியும்!

ஓலையும் தாளும் கடந்து
அலையும் காற்றில் எழுத்து
எனக்காலம் மாறினாலும்
எழுத்து ஓயவில்லை!

அருமையடைந்த கவிஞர்களும்
வறுமைக்குத்தானே உறவாகினர்.
ஆனாலும் உலகம் உய்ய அவரின்
ஆணிசாயவில்லையே!

கவிஞனவனோ விஞ்ஞானியே!
காலமுகந்த கருத்தாய்ந்தே
புவிக்குச்சொல்வான் புதுமையே!
புரியுமுலகு வாழுமே!


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.